சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்  
பண் -   (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.018 பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்   (திருவாரூர் )
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
   கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன்
   முரிவதோர் முரிவுமை யளவும்
தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ
   தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
   விடங்கராய் நடங்குலா வினரே. 

[1]
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
   பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
   திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
   தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
   விடங்கராய் நடங்குலா வினரே. 

[2]

Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
9.019   பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முத்து வயிரமணி மாணிக்க
   மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு
   விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
   எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க
   மாயிற்றே.

[1]
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர்
   என்றுன்
அடியார் அமர்உலகம் ஆளநீ
   ஆளாதே
முடியாமுத் தீவேள்வி மூவா
   யிரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத்
   தாடினையே.

[2]
அல்லியம் பூம்பழனத் தாமூர்நா
   வுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே
   தென்றில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா
   டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே
   சேர்ந்தனையே.

[3]
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்
   டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்
   கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி
   தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை
   யாயிற்றே. 
[4]
களையா உடலோடு சேரமான்
   ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை
   மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா
   யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின்
   ஆடரங்கே. 

[5]
அகலோக மெல்லாம் அடியவர்கள்
   தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ
   தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள்
   நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச்சிற்
   றம்பலமே.

[6]
களகமணி மாடம் சூளிகைசூழ்
   மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார்
   போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை
   ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே
   சேர்ந்தனையே.

[7]
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும்
   பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத்
   தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர்
   நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின்
   ஆடரங்கே.

[8]
உருவத் தெரியுருவாய் ஊழிதோ
   றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும்
   பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு
   மாளிகைசூழ்ந்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்க
   மாயிற்றே.

[9]
சேடர் உறைதில்லைச் சிற்றம்
   பலத்தான்றன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து
   பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங்
   கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை
   பற்றுவரே. 

[10]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool