9.018 பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம் (திருவாரூர் ) |
Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
9.018  
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
பண் - (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன் முரிவதோர் முரிவுமை யளவும் தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ தம்மொருப் பாடுல கதன்மேல் மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடங்குலா வினரே.
| [1] |
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடங்குலா வினரே.
| [2] |
Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
9.019  
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேற் றொத்து மிளிர்வனபோற் றூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க மாயிற்றே.
| [1] |
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமர்உலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி மூவா யிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத் தாடினையே.
| [2] |
அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச் செல்லநெறி வகுத்த சேவகனே தென்றில்லைக் கொல்லை விடையேறி கூத்தா டரங்காகச் செல்வ நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
| [3] |
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட் கொண்டருளி அம்புந்து கண்ணாளுந் தானும்அணி தில்லைச் செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே. | [4] |
களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள முளையா மதிசூடி மூவா யிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.
| [5] |
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப் புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச் சிவலோக மாவதுவும் தில்லைச்சிற் றம்பலமே.
| [6] |
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல் அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும் தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே சேர்ந்தனையே.
| [7] |
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச் சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில் நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும் ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே.
| [8] |
உருவத் தெரியுருவாய் ஊழிதோ றெத்தனையும் பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந் தரவிக்கும் அம்பலமே ஆடரங்க மாயிற்றே.
| [9] |
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்றன் ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்துங் கருத்தறிந்து பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.
| [10] |